பிரான்சில் இடம்பெறவுள்ள சர்வதேச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகரில் 22 - 23ம் திகதி இடம்பெறவுள்ள புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் இடம்பெறவுள்ள உயர்மட்ட குழு விவாதத்தில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.