முல்லைத்தீவுவில் ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் பைக்கில் பயணித்து கொண்டிருந்த போது, வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அந்த பைக் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
இச்சம்பவம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம் கள்ளுத்தவறணைக்கு அருகில் உள்ள கொங்கிறீட் வீதியில் புதன்கிழமை (14) 23 மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கான பைக் ஒன்றில் தாயார் தனது மகனை ஏற்றி ஓடிக்கொண்டு வரும்போது பைக்கில் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக்கொண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதில் பயணித்த தாயும் மகனும் உயிர்தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.