Our Feeds


Saturday, June 10, 2023

News Editor

கொழும்பு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு


 கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் அசாதாரணமாக அதிகரித்து வருகின்றமையால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கொழும்பு மாநகர சபை, கொதடுவை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index இல் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


பொதுவாக Breteau Index மதிப்பு 5% ஆக இருக்க வேண்டும் ஆனால் சில பகுதிகளில் 25% ஆக அதிகரித்துள்ளது.


எனவே, கொழும்பு மாவட்டத்தில் ஜூன் மாத இறுதிக்குள் அதிக தொற்றுநோய் நிலைமை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்தார்.


இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »