Our Feeds


Friday, June 16, 2023

News Editor

கதிர்காமத்தில் இராணுவ உழவு இயந்திர விபத்தில் 7 இராணுவ அதிகாரிகள் படுகாயம்


 கதிர்காமம் கிரிவெஹர ரஜமஹா விகாரைக்கு அருகில் நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரம் இன்று (16) காலை கவிழ்ந்ததில் ஏழு இராணுவ அதிகாரிகள் காயமடைந்து கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்த குழு செல்லகதரகம இராணுவ முகாமின் சிங்க படைப்பிரிவைச் சேர்ந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »