Our Feeds


Friday, June 2, 2023

Anonymous

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 71 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மீட்பு

 



இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 71 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இந்திய பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

 

கடலோர பொலிஸ், வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் சுங்கத்துறை இணைந்து பல நாட்களாக நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

 

தமிழக கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகளில் சுமார் 32 கிலோ எடையுள்ள இந்த தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »