பண்டாரவளை – தியத்தலாவை பிரதான வீதியின் கஹகொல்ல பகுதியில் இன்று (16) காலை பாடசாலை பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பாடசாலை மாணவர்களும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6.30 மணியளவில் விபத்து நடந்ததை அடுத்து, குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கினர்.
காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்