Our Feeds


Saturday, June 17, 2023

Anonymous

உகாண்டாவில் பயங்கரவாத தாக்குதல் - பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

 



கிழக்கு ஆப்பிரிக்காவில் கொங்கோ எல்லையோரம் உள்ள உகாண்டாவின் பொண்ட்வி நகரில் உள்ள கிராமத்தில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


இந்த தாக்குதலில் பாடசாலை மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.



குறித்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.



மேலும் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.



தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »