Our Feeds


Thursday, June 8, 2023

Anonymous

200 கோடி ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுக்கு தீ வைக்கத் தீர்மானம்

 



பெருந்தொகையான வெளிநாட்டு சிகரட்டுகளை அழிக்க சுங்க திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.


கடந்த வருடம் (2022) கைப்பற்றப்பட்ட இந்த சிகரட்டுகளின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.


22 கொள்கலன்களில் இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வரும் 15 ஆம் திகதி முத்துராஜவெலவில் இந்த சிகரட்டுகள் அழிக்கப்படவுள்ளன.


இந்த சிகரெட்டுகள் நசுக்கப்பட்ட பின்னர் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்னர் தீ வைக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »