Our Feeds


Saturday, June 10, 2023

News Editor

11 பேராதனை பல்கலை. மாணவர்கள் இடைநீக்கம்


 பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களை பல்கலைக்கழக விடுதியில் ஐந்து நாட்கள் தங்கவைத்து, நுகர்வுக்கு தகுதியற்ற உணவை அவர்களுக்கு வழங்கியுள்ளதுடன், மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »