இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்த இலங்கைக்கு விசேட சலுகைகள் அடங்கிய கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த கடன் கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கடனானது சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வசதியுடன் தொடர்புடையதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.