Our Feeds


Saturday, April 1, 2023

Anonymous

சுடர் ஒளி பத்திரிக்கையின் முன்னாள் இணை ஆசிரியர் சனத் TID விசாரணைக்கு அழைப்பு!

 



சுயாதீன ஊடகவியலாளர் இராமசந்திரன் சனத், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு, விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் நுவரெலியா அலுவலகத்துக்கு எதிர்வரும் 06 ஆம் திகதி (06.04.2023) முற்பகல் 10 மணிக்கு வருகை தருமாறு , ஊடகவியலாளர் சனத்துக்கு இன்று (01.04.2023) அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


புசல்லாவ பொலிஸார் ஊடாக வழங்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில், பயங்கரவாத விசாரணை பிரிவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், என்ன விசாரணை என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.


சுடர் ஒளி பத்திரிகையின் இணை ஆசிரியராகவும், பாராளுமன்ற செய்தியாளராகவும் செயற்பட்ட சனத், தற்போது சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »