Our Feeds


Thursday, April 6, 2023

SHAHNI RAMEES

ரைஸ் குக்கர் மூடியால் மகளின் முகத்தில் சூடு வைத்த தந்தை

 

பின்வத்தை-வடுபாசல்வத்த பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியின் முகத்தில் தந்தையொருவர் ரைஸ் குக்கரின் மூடியால் சூடு வைத்துள்ளதாக முறைப்பாடு பதிவாகி உள்ளது.



சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்காயங்களுடன் நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு, பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.



நேற்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபரான தந்தை இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, ​​சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.



சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “இவ்வளவு சோறு ஏன் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »