Our Feeds


Monday, April 3, 2023

Anonymous

பொலிஸ்மா அதிபரின் பதவிக் காலம் நீடிப்பு - அரசியலமைப்பு சபை ஒப்புதல்!

 



பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 03 மாத சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சபாநாயகர் தலைமையில் நேற்று மதியம் சட்ட சபை கூடியது.

இதன்போது குறித்த ஆவணங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுப்பி வைக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் 26ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. எனினும் அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »