Our Feeds


Monday, April 3, 2023

SHAHNI RAMEES

நேட்டோ அமைப்பில் இணையும் பின்லாந்து...!

 

உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய இராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த இராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ளது.



அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், துருக்கி உட்பட 30 நாடுகள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. 



இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. 



இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அது 3 ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகின்றது.



இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணையவுள்ளது. நாளை முதல் நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணையவுள்ளது. 



ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணையவுள்ளது. நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதால் அந்த நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். 



இது ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.



பின்லாந்தை போன்று ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளது. ஸ்வீடன் மீதான விண்ணப்பம் இன்னும் பரீசிலனையில் உள்ள நிலையில் பின்லாந்து நாளை நேட்டோ அமைப்பில் இணையவுள்ளது. 



உக்ரைன் - ரஷ்ய போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »