Our Feeds


Wednesday, April 5, 2023

Anonymous

தனியாருக்க வழங்கப்படவுள்ள உர விநியோகம் - மஹிந்த அமரவீர அறிவிப்பு

 



எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரசாயன உரம், சேதன உரம், விதைகள் மற்றும் விவசாய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி நிவாரணங்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்காக, QR குறியீட்டு முறைமையை உருவாக்கி, அனைத்து விவசாயிகளுக்கும் அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »