Our Feeds


Sunday, April 2, 2023

Anonymous

உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார் சஜித்தின் தாய் ஹேமா பிரேமதாஸ!

 



றைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதி ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை கொண்டுள்ளார். அவர் இறக்கும்போது, அவரது மனைவிக்கு அந்த உத்தியோகபூர்வ வீட்டை பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஹேமா பிரேமதாஸ குறித்த வீட்டை பெற்றுக்கொண்டார். 

எனினும், ஹேமா பிரேமதாஸ கொழும்பில் உள்ள அந்த உத்தியோகபூர்வ இல்லத்தை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அரசிடம் அவர் ஒப்படைத்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »