Our Feeds


Thursday, April 6, 2023

SHAHNI RAMEES

6.4 பில்லியன் டொலர்கள் இழப்பீடை இழந்துவிடுமா இலங்கை?

 

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதத்திற்கு இழப்பீடாக 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல் நீதி மையம் வலியுறுத்துகிறது.

 

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 2021 மே மாதம் நீர்கொழும்புக்கு அப்பால் ஆழமற்ற கடலில் தீப்பற்றி அழிவுற்றது. இதனால் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு கோருவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சுற்றுச்சூழல் நீதி மையம் குற்றம் சாட்டியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »