Our Feeds


Thursday, April 6, 2023

SHAHNI RAMEES

40 எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விற்பனை இடைநிறுத்தம்..!

 

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.



QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவது தொடர்பில் அதிகாரிகளுடனான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



குறித்த சந்திப்பில் அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் இறக்குமதித் திட்டம், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பண்டிகைக் காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »