Our Feeds


Tuesday, April 4, 2023

Anonymous

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

 



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.


இதன்படி, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அபாய எச்சரிக்கை, நாளை மாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »