நானுஓயா - ரதெல்ல பகுதியில் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்கள் மாணவர்களிடம் சேர்க்கப்பட்ட 14 இலட்சம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது.
இதில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் வழங்கினர் , இதில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் வங்கி கணக்கில் கல்லூரியின் காப்புறுதி திட்டம் ஊடாக பெருந்தொகை பணமும் வைப்பிலிடப்பட்ட நிலையில், இறந்தவர்களின் திதி கொடுப்பதற்கான செலவினையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது..
குறித்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில், இதில் மாவட்ட செயலாளர் நந்தன கலபொட , நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் , பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்