தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்படும் பட்சத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தணிக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புற்றுநோயாளிகள் உட்பட உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தாம் அடக்குமுறைக்கு எதிரானவர் எனவும், தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.