Our Feeds


Friday, March 31, 2023

Anonymous

இம்ரான்கானுக்கு மீண்டும் பிணையில்லா பிடியாணை – பாக். நீதிமன்றம் உத்தரவு

 



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.


எனினும் இந்த வழக்குகளில் அவருக்கு பிணை கிடைத்தது. இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான்கான் கூடுதல் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தமைத் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வருகிறது.


இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »