Our Feeds


Thursday, March 2, 2023

Anonymous

புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன், அஜித் ரோஹன உள்ளிட்ட மும்முனை போட்டி!

 



வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது. 


பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோருக்கிடையில் இந்த மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தனது சேவையை முடித்து இம்மாதம் 20ம் திகதி ஓய்வு பெறவுள்ளார். 

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மேற்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனித்தனியான விடயங்களை முன்வைப்பதற்கும் பல சிரேஷ்ட அமைச்சர்கள்  முனைவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »