Our Feeds


Wednesday, March 1, 2023

Anonymous

இலங்கைக்கு புதிய அணுமின் நிலையம்!

 



 இலங்கைக்கு விரைவில் அணு உலைகள் ஊடாக மின்வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அணு சக்தி சபையின் தலைவர் எஸ்.ஆர்.டீ.ரோசா தெரிவித்துள்ளார்.


இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக அணுசக்தி சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


அதன் பின்னர் ரஷ்ய அரசாங்கத்துடன் கதைத்து இலங்கையில் 100 மெகாவோட் மின்சாரத்தை பெறும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »