Our Feeds


Friday, March 31, 2023

News Editor

பாகிஸ்தான் அரசாங்கத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்


 இந்தியாவில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 


ட்விட்டர் கணக்கை முடக்க இந்தியாவின் மத்திய அரசாங்கம் ட்விட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


சட்டப்பூர்வமாக கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் கணக்குகளை முழுமையாக நிறுத்திவைக்க ட்விட்டர் நிறுவன வழிமுறைகள் அனுமதிக்கின்றன. 


அதன்படி பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு @GovtofPakistan இந்திய எல்லை பகுதிக்குள் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 


அரசாங்க ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என அறியப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »