Our Feeds


Thursday, March 30, 2023

Anonymous

மைத்ரி - கோட்டா கொலைச் சதி - முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவுக்கு மீண்டும் பதவி!

 



முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி காவல்துறைமா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.


அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக நாமல் குமார என்பவரால் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பின்னணியில், 2018 ஆம் ஆண்டு, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி காவல்துறைமா அதிபர் நாலக சில்வா கைது செய்யப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »