Our Feeds


Friday, March 3, 2023

News Editor

கிளிநொச்சி டிப்போ இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!


 கிளிநொச்சி இ.போ.சபை பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பஸ்கள் இன்று காலையில் சேவையில் ஈடுபடவில்லை.


அலுவலகப் பணியாளர்களிற்கான பஸ் சேவையை இ.போ.சபையினர் ஆரம்பித்த பின்னர், தனியார்துறையினர் அதில் குறுக்கீடு செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, தற்போது தனியார் துறையினரே அந்த சேவையில் ஈடுபட்டுள்ளனர்.


எனினும், அதன் தொடர்ச்சியாக இ.போ.ச பேருந்துகளின் சுமுகமான சேவைக்கு தனியார் துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தலாக செயற்பட்டு வருகின்றனர். நேற்றும் தனியார்துறை பஸ் ஒன்று, இ.போ.ச பஸ்ஸினை நடுவீதியில் வழிமறித்து மிரட்டல் விடுத்திருந்தது.


பணிப்புறக்கணிப்பிற்கான காரணத்தை இ.போ.ச கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறிவித்திருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »