Our Feeds


Wednesday, March 1, 2023

Anonymous

அனைத்துக் கட்சி தலைவர்களை அவசரமாக அழைத்தார் சபாநாயகர்.

 



சகல கட்சிகளின் தலைவர்களுடன் இன்று (01) பிற்பகல் 1.30 மணிக்கு விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளது.

சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த அவசரக்கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அதில் பங்கேற்குமாறு கட்சிகளின் செயலாளர்களுக்கு பாராளுமன்றம் செயலாளர் அறிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் இடம்பெறவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »