Our Feeds


Wednesday, March 1, 2023

Anonymous

புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது

 



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (green channel) சுங்கப் பகுதியில் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பொலிவிய பெண் ஒருவர் துணி மற்றும் பையில் மறைத்து வைத்திருந்த 4.6 கிலோ கொக்கைனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


துணி மற்றும் துணிப் பைககளில் போதைப்பொருள் தோய்க்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.


சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர் பிரேசிலில் இருந்து துபாய் வழியாக விமானம் மூலம் வந்துள்ளார்.


சந்தேகநபர் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது அவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் என இலங்கை சுங்கப் பிரிவினர் கூறுகின்றனர்.


கைப்பற்றப்பட்ட கொக்கைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளின் பெறுமதி 230 மில்லியன் ரூபாவாகும்.


இது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவியுடன், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் சுங்க அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »