Our Feeds


Wednesday, March 1, 2023

Anonymous

உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக பாராளுமன்றில் 2 நாட்கள் விவாதம்!

 



உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற விவகாரக் குழுவில் இரண்டு நாள் விவாதம் கோரினார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »