கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது, 180 வீடுகளும், 100 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
எனினும் இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி இராசாயன பரிசோதகர் பீ.ஜீ.மடவல தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த தகவல்களை குறிப்பிட்டார்.
அத்துடன் அப்போதைய பிரதமரின் இல்லத்துக்கு தீ வைப்பதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் எரிபொருள் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் பிரதி இராசாயன பரிசோதகர் பீ.ஜீ.மடவல தெரிவித்தார்.