தான் ஆட்சியில் இருந்தால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வேறுவிதமாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வழங்கப்படும் போது, தான் ஆட்சியில் இல்லாத காரணத்தினால், அதன் பெறுபேறுகள் பாதகமாகவே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.