உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு செயற்பாடுகள் குறித்து தேசிய மக்கள் சக்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு நேற்று (17) அறிவித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்குச் சென்று கடிதம் ஒன்றை கையளித்தார்.
தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட கடிதம், ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தில் கையளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.