(எம்.பஹத் ஜுனைட் )
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான போராட்டமொன்று சனிக்கிழமை (18) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரன் (ஜனா), மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜ சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கக்கோரி ஜனாதிபதிக்கான மகஜரினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரன் (ஜனா) அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.