Our Feeds


Tuesday, February 28, 2023

Anonymous

NPP யில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தோரை பேர வாதி அழுக்குத் தண்ணீரினால் குளிப்பாட்டினோம் - மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கு சுத்தமான தண்ணீர் தேவையில்லை - இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

 



தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு பேர ஏரியின் நீரை பொலிஸார் பயன்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிடுகின்றார்.


எல்லா விலைகளும் உயர்ந்துள்ள இந்த நேரத்தில், இந்தக் காடையர்கள் குளிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கு சுத்தமான தண்ணீர் தேவையில்லை என்கிறார்.

பொலிஸாரின் தாக்குதலுக்கு சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடகர் இராஜ் வீரரத்ன முகநூல் ஊடாக இராஜாங்க அமைச்சரிடம் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »