Our Feeds


Friday, February 3, 2023

SHAHNI RAMEES

கரு ஜயசூரியவுக்கு “ஸ்ரீலங்காபிமன்ய” விருது- ஜனாதிபதி வழங்கிவைப்பு

 சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமன்ய விருது வழங்கிவைக்கப்பட்டது.



ஜனாதிபதி மாளிகையில் இன்று (03) நடைபெற்ற விழாவில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தப் விருதை கரு ஜயசூரியவிற்கு வழங்கினார்


2018ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் முக்கிய பங்கு வகித்தமைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மதிப்புமிக்க விருதை பெறும் எட்டாவது நபர் என்ற பெருமையை 82 வயதான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பெற்றுள்ளார்.


1986இல் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்த விருதினை முதன்முதலிலும், 2017 ஆம் ஆண்டு டபிள்யூ.டி.அமரதேவ இறுதியாகவும் இந்த விருதினைப் பெற்றிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »