Our Feeds


Tuesday, February 21, 2023

SHAHNI RAMEES

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது - தேர்தல் ஆணைக்குழு

 

உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்.



வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் எல்லை நிர்ணய வர்த்தமானியில் வெளியிடப்பட்டால் மாத்திரமே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும்.



எவ்வாறாயினும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என இதுவரை குறிப்பிட்ட அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் அதனை நடத்துவதில் உள்ள சிரமம் குறித்து மாத்திரமே உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »