Our Feeds


Tuesday, February 28, 2023

Anonymous

நாளை பாடசாலைகளில் கறுப்பு ஆடைகளை அணிந்து அல்லது கறுப்பு துணிகளை கட்டி போராட்டம் - இலங்கை ஆசிரியர் சங்கம்!

 



நாளை (01) கருப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர்களின் முதன்மை தொழிற்சங்க கூட்டணியின் தொழிற்சங்கத் தலைவர்களின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


குறித்த கலந்துரையாடலின் போது, மார்ச் 01 வேலைநிறுத்தம் நடத்த முன்மொழியப்பட்டதோடு, கருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


அதன்படி, அன்று பாடசாலைகளில் கறுப்பு ஆடைகளை அணிந்து அல்லது கறுப்பு துணிகளை கட்டிக் கொண்டு அதிபர், ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.


போக்குவரத்து கொடுப்பனவை வழங்க ஆசிரியர்கள்-அதிபர்களுக்கு அதிகாரம் வழங்குதல், வங்கி வட்டியை உயர்த்துவதற்கும் வரி விதிப்பதற்கும் எதிராக, தேர்தலை ஒத்திவைத்து அடக்குமுறைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »