Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு, தேர்தல் தாமதமானால் சம்பளம் கிடைக்குமா? - அமைச்சர் அமரவீர பதில்!

 



இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கன்நொருவ தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே தேர்தல் தாமதம் ஆனதால், இந்த ஆண்டு தேர்தலுக்கு ஊதியம் இல்லாமல் விடுமுறையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திருத்தம் செய்து அதனை மாற்றுவதற்கு பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »