Our Feeds


Wednesday, February 1, 2023

News Editor

கொழும்பு வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு


 75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.


சுதந்திர தின ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது சாரதிகள் முடிந்தளவு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இவ்வீதியை பயன்படுத்த விரும்பும் சாரதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அதனால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »