Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

தேர்தலுக்கான நிதியை திரட்ட களமிறங்குகிறது “பெப்ரல்“ அமைப்பு.

 



(எம்.வை.எம்.சியாம்)


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி திரட்டுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தயாராக உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நிதிப் பற்றாக்குறை தான் உண்மையான பிரச்சினை என்றால் தேர்தலுக்கான நிதியைப் பெறுவதற்கான பணிகளை இந்த வாரத்தில் இருந்து தொடங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மக்களின் உரிமைகளை சீர்குலைக்கும் வகையில் நிதிப் பிரச்சினைகளை முன்வைத்து அரசாங்கம் தேர்தலை பிற்போட அனுமதிக்க முடியாது. 

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களையும் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு பற்றி அடிக்கடி பேசுகிறார். ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டையும் நடத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறார்.

நிதி நெருக்கடிகள், தேர்தலை நடத்த முடியாது என்று முன்னர் எந்த அரசாங்கமும் கூறவில்லை. இன்று எதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்? உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தால் எதிர்காலத்தில் ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் அதே முறையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும். இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »