மீபாகம நீர்த்தேக்கத்திலிருந்து குகுலேகங்க நீர் மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லும் குழாய் அமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குகுலேகங்க நீர் மின் நிலையம் மூன்று மாத காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.
குகுலேகங்கநீர் மின் நிலையத்தின் பிரதம பொறியியலாளர் சாந்த பெரேரா இதை தெரிவித்துள்ளார்.
இந்த மின் உற்பத்தி நிலையம் இலங்கையின் இரண்டாவது நிலத்தடி நீர் மின் நிலையமாகும்.
தண்ணீரை எடுத்துச் செல்லும் நிலத்தடி குழாய் அமைப்பில் பழுது நீக்கும் பணி முடிந்தவுடன், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் நீர் மின் உற்பத்தி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.