Our Feeds


Monday, February 20, 2023

News Editor

பாம்பு தீண்டி சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழப்பு



 மட்டக்களப்பில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.

 

இவ்வாறு உயிரிழந்த  நபர் ஓட்டமாவடி - சூடுபத்தின சேனையில் வசித்து வந்த 61 வயதுடைய சேகு இஸ்மாயில் முகம்மது உசனார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த நபர் தனது காணியில் கடந்த வியாழக்கிழமை (16) வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »