Our Feeds


Saturday, February 18, 2023

News Editor

பாடசாலைகள் மீண்டும் திங்கள் ஆரம்பம்


 நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி, கடந்த 17 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன.

இதனை முன்னிட்டு ஜனவரி 20 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி , மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி தவணை கல்வி நடவடிக்கைகள் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. கடந்த 16ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

இப்பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் மார்ச் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »