Our Feeds


Wednesday, February 1, 2023

Anonymous

பரீட்சை முடியும் வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கவில்லை - பொதுப் பயண்பாட்டு ஆணைக்குழு!

 



க. பொ. த உயர்தர பரீட்சைகளுக்கு முகம் கொடுத்துள்ள 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்காது என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இந்த காலப்பகுதியில் இடம் பெறும் இதுபோன்ற மின்வெட்டுகள் எதுவும் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை நிறைவடையும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரை தமது ஆணைக்குழு, மின்வெட்டுக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »