Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

தேர்தலை பிற்போடுவதால் நாடு சர்வாதிகாரத்தை நோக்கி தள்ளப்படலாம் - கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரிக்கை!

 



உள்ளூராட்சி   சபை தேர்தல்களை பிற்போடுவது  ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி சபை தேர்தல்கள் பிற்போடுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என குறிப்பிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் இதன் காரணமாக நாடு இறுதியில் சர்வாதிகாரத்தை நோக்கி தள்ளப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் பிற்போடப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்தின் மத்தியில் பெற்றுக்கொண்ட நம்பிக்கையை இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ள அவர் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நம்பியிருக்கின்ற இந்த தருணத்தில் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நன்மைக்காக முன்வரவேண்டியது அனைத்து கட்சிகள் சிவில் அமைப்புகள் மததலைவர்களின் கடமை எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி    தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம்,எதிர்மறையான பெயர் உருவாவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »