Our Feeds


Monday, February 6, 2023

SHAHNI RAMEES

பூ பறிக்கச் சென்ற பெண் சடலமாக மாறிய சோகம்...!

 

பிலியந்தலை-மிரிஸ்வத்த சந்தி பகுதியில் சொகுசு பஸ்ஸில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.



மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.



பூ பறிப்பதற்காக வீட்டிலிருந்த வீதியைக் கடந்துச் சென்று மீண்டும் அதே வீதியைக் கடந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, பிலியந்தலையில் இருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த சர்வதேச பாடசாலைக்கு சொந்தமான சொகுசு பஸ்ஸில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பஸ் சாரதி கவனக்குறைவாக பஸ்ஸினை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



இந்நிலையில், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »