Our Feeds


Sunday, February 19, 2023

Anonymous

எம்பிலிபிட்டியவில் கஞ்சா தோட்டம் முற்றுகை - 8410 கஞ்சா செடிகள் தீ வைத்து அழிப்பு

 



தனமல்வில பொலிஸ் பிரிவிலுள்ள எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் இன்று ஞாயிறுக்கிழமை (19) முற்றுகையிட்ட நிலையில், அங்கிருந்து 8410 கங்சா செடிகளை பிடுங்கி அழித்ததுடன் உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளதாக தனமல்வில பொலிசார் தெரிவித்தனர்


கதிர்காமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அதிரடிப்படை கட்டளைத்தளபதி சிரேஸ்;ட பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய கதிர்காம விசேட அதிரடிப்படையின் சப் இன்பெக்ஸ்டர் தலமையிலான அதிரடிப்படையினர் இன்று காலை 8.30 மணிக்கு எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிட்டுவந்த இரண்டு கஞ்சா தோட்டங்களை முற்றுகையிட்டனர்.


இதனையடுத்து கஞ்சா பயிரிட்டுவந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அங்கிருந்த ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 5 அடி உயரம் கொண்ட 7600 கஞ்சா செடிகளையும் அடுத்து தோட்டத்தில் 20 பேச் நிலப்பரப்பில் பயிரப்பட்டிருந்த 3 அடி உயரம் கொண்ட 810 கஞ்சா செடிகள் உட்பட 8410 செடிகளை பிடுங்கி தீயிட்டு அழித்தனர்


இதேவேளை அங்கிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றம் மருந்துக்களை மீட்டு அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


(கனகராசா சரவணன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »