Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர்களை அள்ளி வழங்குகிறது ஜப்பான்.

 



உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளதையொட்டி உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.45 ஆயிரத்து 487 கோடி) நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார். 


டோக்கியோவில் இடம்பெற்ற உலகளாவிய மன்றத்தில் பங்கேற்று அங்கு உரையாற்றும் போதே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார்.


மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில்,


'உக்ரைன் இன்னும் ரஷ்ய படையெடுப்பின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளது.


ரஷ்ய தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு உதவி தேவை. எனவே உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது. 


மேலும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் 24-ம் திகதி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பங்கேற்புடன் ஜி-7 மாநட்டை நடத்த முடிவு செய்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »