Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

4,800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி கிடைத்தது

 



நாடளாவிய ரீதியில் 4,800 அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.


இதற்காக சுமார் 10,000 பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதும், அந்த கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு பதிலளிப்பதில் தொடர்ச்சியாக தாமதம் ஏற்படுத்தியது.

இதையடுத்து, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தனது ஆட்சேபனையை முன்வைத்ததையடுத்து அரச சேவை ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »